ஐசிசி வெளியிட்டுள்ள சோதனை வீரர்களின் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் மூன்று பேர் இடம் பெற்றுள்ளனர்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சோதனை வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
மட்டையாட்டம் தரவரிசையில் இந்திய வீரர் ரிஷப்பண்ட் 747 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஐ.சி.சி.சோதனை தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த முதல் இந்திய மட்டையிலக்கு கீப்பர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
ரிஷப்பண்ட் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் மிகவும் இக்கட்டான நிலையில் அபாரமாக விளையாடி அணியை காப்பாற்றினார். இதன் மூலம் இளம் மட்டையிலக்கு கீப்பரான ரிஷப்பண்ட் மிடில் ஆர்டரில் தவிர்க்கமுடியாத வீரராக உருவெடுத்துள்ளார்.
இந்த அணி கேப்டன் விராட் கோலி 814 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளார். ரோகித் சர்மாவும் 747 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளார்.
நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 919 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். ஸ்டீவ் சுமித், மார்னஸ் லபுசேன் (ஆஸ்தி ரேலியா) முறையே 2-வது, 3-வது இடங்களில் உள்ளனர்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar