Press "Enter" to skip to content

நான் மேட்ச் பிக்சர் இல்லை: சல்மான் பட்டுக்கு மைக்கேல் வாகன் பதில்

கேன் வில்லியம்சன்தான் விராட் கோலியை விட சிறந்தவர் என்ற கருத்தில் சல்மான் பட்டுக்கும், மைக்கேல் வாகனுக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன். தற்போது வர்ணனையாளராக உள்ளார். அவ்வப்போது சமூக இணையத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தும் கருத்துகளை பதிவிட்டு, ரசிகர்களின் விமர்சனத்திற்கும் உள்ளாவார்.

அடுத்த மாதம் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. இதுகுறித்து பேசும்போது ‘‘விராட் கோலியை விட கேன் வில்லியம்சன்தான் சிறந்த பேட்ஸ்மேன். அவர் இந்தியாவில் பிறந்திருந்தால் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்று அழைக்கப்பட்டிருப்பார்’’என்று வாகன் தெரிவித்திருந்தார்.

மைக்கேல் வாகனின் இந்த கருத்துக்கு கடும் விமர்சனம் எழுந்த வண்ணம் உள்ளது. மைக்கேல் வாகனின் இந்த கருத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் தொடக்க வீரர் சல்மான் பட் ‘‘இப்போது, ஒரு தொடக்க வீரராக, நீங்கள் ஒரு சதம் கூட பெறவில்லை என்றால், அது விவாதிக்கத்தக்கதல்ல. ஒரு விவாதத்தைத் தூண்டும் விஷயங்களைச் சொல்வதில் ஒரு திறமை இருக்கிறது. தவிர, ஒரு தலைப்பை நீ்ட்டிக்கொண்டே செல்ல மக்களுக்கு நிறைய நேரம் இருக்கிறது.

மேலும், ஒப்பிடுவது யார்? மைக்கேல் வாகன். அவர் இங்கிலாந்தின் தலைசிறந்த கேப்டன் ஒரு விசயம் என்னவெனில் அவர் மட்டையாட்டம்கில் சிறந்தப்பாக செயல்படவில்லை. சிறந்த சோதனை பேட்ஸ்மேன். ஆனால் ஒருநாள் போட்டியில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை’’ எனத் தெரிவித்திருந்தார்.

இதனால் கோபம் அடைந்த மைக்கேல் வாகன் ‘‘இது மிகவும் உண்மை சல்மான். ஆனால், எங்களுடைய சிறந்த விளையாட்டு சிலரை போன்று கரைபடிய நான் மேட்ச் பிக்சர் இல்லை’’ எனத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் 2010-ம் ஆண்டு நடைபெற்ற சோதனை போட்டியின்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டு சல்மான் பட் கைது செய்யப்பட்டதோடு, கிரிக்கெட் விளையாட தடையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »