Press "Enter" to skip to content

இத்தாலி ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ரபேல் நடால்

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் 10-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ரபேல் நடால்.

ரோம்:

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடைபெற்றது. இதில் ஆண்கள்  ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரர் செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச்சும், ஸ்பெயினை சேர்ந்த மூன்றாம் நிலை வீரரான ரபேல் நடாலும் மோதினர்.

முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் ரபேல் நடால் கைப்பற்றினார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இரண்டாவது செட்டை 6-1 என கைப்பற்றி அசத்தினார் ஜோகோவிச்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் ரபேல் நடால் அதிரடியாக ஆடினார். இதனால் 6-3 என்ற கணக்கில் வென்றார்.

2 மணி நேரம் 49 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 7-5, 1-6, 6-3  என்ற செட் கணக்கில் ரபேல் நடால் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் ரபேல் நடால் வெல்லும் 10-வது பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »