Press "Enter" to skip to content

ஐசிசி உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதி போட்டி: 5-வது நாள் ஆட்டம் 1 மணி நேரம் தாமதமாக தொடங்கியது

போட்டி தொடங்குவற்கு சற்று முன் லேசான மழை பெய்ததால், 5-வது நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக சோதனை சாம்பியன்ஷிப் இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது.

போட்டி கடந்த 18-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. முதல்நாள் ஆட்டம் மழையால் முற்றிலும் பாதிக்கப்பட்டது. 2-வது நாள் போட்டி நடைபெற்றது. நியூசிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. இந்தியா 64.4 சுற்றில் 3 மட்டையிலக்கு இழப்பிற்கு 146 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி முன்னதாகவே நிறுத்தப்பட்டது.

நேற்றுமுன்தினம் 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய இந்தியா 92.1 சுற்றில் 217 ஓட்டங்கள் எடுத்து அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர் ஆனது. அதன்பின் நியூசிலாந்து முதல் பந்துவீச்சு சுற்றுசை தொடங்கியது. நியூசிலாந்து 49 சுற்றில் 2 மட்டையிலக்கு இழப்பிற்கு 101 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

நேற்று மதியம் 3 மணிக்கு 4-வது நாள் ஆட்டம் தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழை பெய்ததால் ஆட்டம் தொடங்கப்படவில்லை. தொடர்ந்து மழை பெய்ததால், 4-வமு ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் நேற்றைய ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்று மதியம் 3 மணிக்கு 5-வது நாள் ஆட்டம் தொடங்குவதாக இருந்தது. சவுத்தம்டனில் காலையில் மழை இல்லை. இதனால் போட்டி குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போட்டி தொடங்குவற்கு சற்று முன் மழை, லோசான தூறலாக பெய்தது, இதனால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »