Press "Enter" to skip to content

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் இன்று மோதல்

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்சை 64 ரன்னுக்குள் 7 மட்டையிலக்குடுகளை வீழ்த்தி கட்டுப்படுத்திய நிலையில் மழை குறுக்கிட்டதால் அந்த ஆட்டம் பாதியில் ரத்தானது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள்

சென்னை:

5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்- 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இன்று(சனிக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.

இதில் மாலை 3.30 மணிக்கு நடக்கும் ஒரு ஆட்டத்தில் கவுசிக் காந்தி தலைமையிலான நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, பாபா அபராஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்சை எதிர்கொள்கிறது. கில்லீஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்சை 64 ரன்னுக்குள் 7 மட்டையிலக்குடுகளை வீழ்த்தி கட்டுப்படுத்திய நிலையில் மழை குறுக்கிட்டதால் அந்த ஆட்டம் பாதியில் ரத்தானது. இதையடுத்து வெற்றிக்கணக்கை தொடங்கும் உத்வேகத்துடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தீவிரமாக தயாராகி வருகிறது. அதே சமயம் தனது தொடக்க லீக்கில் திருச்சி வாரியர்சிடம் 74 ஓட்டத்தை வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த நெல்லை ராயல் கிங்ஸ் அணி சரிவில் இருந்து மீளும் முனைப்புடன் இருப்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. இரவு 7.30 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இவ்விரு ஆட்டங்களையும் விண்மீன் விளையாட்டு 1 தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »