3-வது காலிறுதி ஆட்டத்தில் 26வது நிமிடத்தில் ஹர்மன்ப்ரீத் சிங் மீண்டும் ஒரு கோல் அடித்தார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இன்று காலை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய 6-வது நிமிடத்தில் நியூசிலாந்து முதல் கோலை அடித்து இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது.
ஆனால், இந்திய வீரர் ருபிந்தர் பால் சிங் 10-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்தார். இதனால் முதல் கால் பகுதி ஆட்டம் 1-1 என சமநிலை பெற்றது. 2-வது கால் பகுதி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஹர்மன்ப்ரீத் சிங் 26-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது.
3-வது காலிறுதி ஆட்டத்தில் 26-வது நிமிடத்தில் ஹர்மன்ப்ரீத் சிங் மீண்டும் ஒரு கோல் அடித்தார். ஆனால் நியூசிலாந்து அடுத்த நிமிடத்தில் (27-வது நிமிடம்) ஒரு கோல் அடித்தது. இதனால் 3-வது காலிறுதி ஆட்டம் முடிவில் இந்தியா 3-2 என முன்னிலை பெற்றது.
4-வது காலிறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் இந்தியா 3-2 என வெற்றி பெற்றது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar