Press "Enter" to skip to content

வில்வித்தை: தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்

பூடான் மற்றும் அமெரிக்க வீராங்கனைகளை வீழ்த்திய இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

வில்வித்தை போட்டியில் இன்று ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்றன. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் தீபிகா குமார் பூடானின் கர்மாவை  எதிர்கொண்டார். இதில் தீபிகா குமாரி ஒரு செட் பாயிண்ட்-ஐ கூட விட்டுக்கொடுக்காமல் 6-0 என எளிதில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

2-வது சுற்றில் அமெரிக்காவின் ஜெனிபர் முனிசோ-பெர்னாண்டஸை எதிர்கொண்டார். இதில் 6-4 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினா்ர. 

தீபிகா குமாரி முதல் செட்டை 25-26 என இழந்தார். ஆனால் 2-வதுசெட்டை 28-25 எனக் கைப்பற்றினார். 3-வது செட்டையும் 27-25 எனக் கைப்பற்றினார். 4-வது செட்டை 24-25 என இழந்த நிலையில், 5-வது செட்டை 26-25 என கைப்பற்றி 6-4 என செட் பாயிண்ட் பெற்று வெற்றி பெற்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »