இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 40 ஓட்டங்கள் சேர்த்தார்.
கொழும்பு:
இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், சகாரியா மற்றும் ராணா ஆகியோர் அறிமுகமாகினர்.
டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் மட்டையாட்டம் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 மட்டையிலக்கு இழப்பிற்கு 132 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 40 ஓட்டங்கள் சேர்த்தார். தேவ்தத் படிக்கல் 29 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 21 ரன்களும் சேர்த்தனர்.
இலங்கை தரப்பில் அகிலா தனஞ்செயா 2 மட்டையிலக்கு எடுத்தார். துஷ்மந்தா சமீரா, வனிந்து ஹசரங்கா, தசுன் ஷனகா ஆகியோர் தலா ஒரு மட்டையிலக்கு எடுத்தனர்.
இதையடுத்து 133 ரனகள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar