Press "Enter" to skip to content

கொல்கத்தாவிற்கு எதிராக ஆர்.சி.பி. டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு

அபு தாபியில் நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ஆர்.சி.பி. டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு செய்துள்ளது.

ஐ.பி.எல். 2021 லீக்கின் 31-வது ஆட்டம் அபு தாபியில் நடக்கிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு செய்துள்ளார்.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றை எதிர்த்து போரிடும் முன்கள பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆர்.சி.பி. வீரர்கள் நீல வண்ண ஜெர்சியுடன் விளையாடுகிறார்கள்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள் விவரம்:

1. விராட் கோலி, 2. தேவ்தத் படிக்கல், 3. எஸ். பரத், 4. மேக்ஸ்வெல், 5. ஏபி டி வில்லியர்ஸ், 6. வணிந்து ஹசரங்கா, 7. சச்சின் பேபி, 8. கைல் ஜேமிசன், 9. முகமது சிராஜ், 10. ஹர்ஷல் பட்டேல், 11. சஹல்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் விவரம்:

1. ஷுப்மான் கில், 2. நிதிஷ் ராணா, 3. ராகுல் திரிபாதி, 4. மோர்கன், 5, அந்த்துர ரஸல், 6. தினேஷ் கார்த்திக், 7. சுனில் நரைன், 8. வெங்கடேஷ் அய்யர், 9. பெர்குசன், 10. வருண் சக்ரவர்த்தி, 11. பிரசித் கிருஷ்ணா.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »