பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியின் ரிச்சி பெர்ரிங்டன் சிறப்பாக அரை சதமடித்து 70 ஓட்டங்கள் எடுத்தார்.
அல் அமீரத்:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று போட்டியில் இன்று ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள பப்புவா நியூ கினியா, ஸ்காட்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் மட்டையாட்டம் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 சுற்றில் 9 மட்டையிலக்கு இழப்புக்கு 165 ஓட்டங்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக பெர்ரிங்டன் 70 ஓட்டங்கள் எடுத்தார். கிராஸ் 45 ஓட்டங்கள் எடுத்தார்.
பப்புவா நியூ கினியா சார்பில் கபுவா மோரியா 4 மட்டையிலக்குடும், சாட் சோபர் 3 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 166 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பப்புவா நியூ கினியா அணி களமிறங்கியது. அதிகபட்சமாக நார்மன் வனுவா 47 ஓட்டங்கள் எடுத்தார். சீரான இடைவெளியில் மட்டையிலக்குடுகள் வீழ்ந்தன.
இறுதியில், 19.3 சுற்றில் பப்புவா நியூ கினியா அணி 148 ரன்களுக்கு அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்டானது. இதன்மூலம் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து வெற்றி பெற்றது.
ஸ்காட்லாந்து சார்பில் ஜோஷ் டேவி 4 மட்டையிலக்கு வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருது ரிச்சி பெர்ரிங்டனுக்கு வழங்கப்பட்டது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar