Press "Enter" to skip to content

டி20 உலகக்கோப்பை: ஓமனை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி

சிறப்பாக பந்து வீசிய ஓமன் அணியின் பிலால் கான் மற்றும் பய்யாஸ் பட் தலா 3 மட்டையிலக்குடுகளை கைப்பற்றினர்.

மஸ்கட்:

டி20 உலகக்கோப்பை தொடரில் நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டியில் வங்கதேசம்-ஓமன் அணிகள் பலப்பரிட்சை நடத்தின.

அல் அமீரட் நகரத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் மட்டையாட்டம் தேர்வு செய்தது. அதன்படி, வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக நைம் மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோர் களமிறங்கினர்.

லிட்டன் தாஸ் 6 ஓட்டங்களில் அவுட் ஆகி வெளியேறிய போதிலும், நைம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். அவர் 50 பந்துகளில் 4 சிக்சர்கள் 3 பவுண்டரிகளுடன் 64 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த சகீப் அல் ஹசன் 42 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய கேப்டன் மஹ்முதுல்லா 10 பந்துகளில் 17 ஓட்டங்கள் எடுத்தார். இறுதியில் வங்காளதேச அணி 20 சுற்றுகள் முடிவில் 153 ரன்களுக்கு அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர் ஆனது. சிறப்பாக பந்து வீசிய ஓமன் அணியின் பிலால் கான் மற்றும் பய்யாஸ் பட் தலா 3 மட்டையிலக்குடுகளை கைப்பற்றினர்.

பின்னர், 154 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஓமன் அணியின் தொடக்க வீரர்களாக அகிப் மற்றும் ஜத்திந்தர் சிங் களமிறங்கினர். அகிப் 6 ஓட்டங்களில் வெளியேறினார்.

சற்று நிலைத்து நின்று ஆடிய தொடக்க வீரர் ஜத்திந்தர் சிங் 40 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் வங்கதேச அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் ஓமன் அணி 20 சுற்றுகள் முடிவில் 9 மட்டையிலக்குடுகள் இழப்பிற்கு 127 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால், ஓமன் அணியை 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச அணி அபார வெற்றிபெற்றது.

வங்கதேசம் தரப்பில் அந்த அணியின் முஸ்தபிஷிர் ரஹ்மான் 4 மட்டையிலக்குடுகளையும், சகீப் அல் ஹசன் 3 மட்டையிலக்குடுகளையும் வீழ்த்தினர். மட்டையாட்டம் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட வங்காளதேச அணியின் சகீப் அல் ஹசன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »