56 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 70 பந்துகள் மீதமிருந்த நிலையில், வெற்றியை ருசித்தது.
துபாய்:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று துபாயில் நடைபெற்ற சூப்பர்-12 லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் விளையாடின. முதலில் மட்டையாட்டம் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள், இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து மட்டையிலக்குடை இழந்தனர். கிறிஸ் கெயில் (13) தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். 14.2 சுற்றுகள் மட்டுமே தாக்குப்பிடித்த அந்த அணி 55 ஓட்டங்களில் அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர் ஆனது.
இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 2.2 சுற்றுகள் வீசி, 2 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 4 மட்டையிலக்குடுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து, 56 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 70 பந்துகள் மீதமிருந்த நிலையில், வெற்றியை ருசித்தது.
துவக்க வீரர் ஜேசன் ராய் 11 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோ 9 ரன், மொயீன் அலி 3 ரன், லிவிங்ஸ்டன் 1 ஓட்டத்தை எடுத்தனர். மறுமுனையில் கவனமாக விளையாடிய ஜாஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 24 ரன்களும், கேப்டன் மார்கன் ஆட்டமிழக்காமல் 7 ரன்களும் எடுத்தனர். இதனால் இங்கிலாந்து அணி 6 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar