Press "Enter" to skip to content

டி20 உலகக் கோப்பை- 5 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இலங்கை

மூன்றாவது வீரராக களமிறங்கிய சரித் அசலங்கா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.

சார்ஜா:

டி20 உலகக் கோப்பை சூப்பர்-12 சுற்றில் இன்று சார்ஜாவில் நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை, வங்காளதேசம் அணிகள் மோதின.  முதலில் மட்டையாட்டம் செய்த வங்காளதேசம் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 மட்டையிலக்கு இழப்பிற்கு 171 ஓட்டங்கள் சேர்த்தது.  துவக்க வீரர் முகமது நயிம் 62 ஓட்டங்கள் குவித்தார். அதிரடியாக ஆடிய முஷ்பிகுர் ரஹிம் 36 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 57 ஓட்டங்கள் (நாட் அவுட்) குவித்தார். 

இதையடுத்து 172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின், துவக்க வீரர்கள் விரைவில் மட்டையிலக்குடை இழந்தனர். மூன்றாவது வீரராக களமிறங்கிய சரித் அசலங்கா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். மறுமுனையில் பனுகா ராஜபக்சவும் வங்காளதேச பந்துவீச்சை துவம்சம் செய்தார். இருவரும் அரை சதம் கடந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். பனுகா ராஜபக்ச 53 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் சரித் அசலங்காவுடன் கேப்டன் சனகா இணைய, இலங்கை அணி 18.5 ஓவர்களில் 172 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் 5 மட்டையிலக்கு வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. சரித் அசலங்கா 49 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 80 ஓட்டங்கள் (நாட் அவுட்) குவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »