Press "Enter" to skip to content

மிட்செல் மார்ஷ் அரை சதம் – பஞ்சாப் வெற்றி பெற 160 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டெல்லி

பஞ்சாப்புக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியின் மிட்செல் மார்ஷ் அரை சதமடித்து அசத்தினார்.

மும்பை:

ஐபிஎல் தொடரின் 64-வது லீக் ஆட்டம் மும்பையில் நடைபெறுகிறது. இதில் டெல்லி கேபிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

அதன்படி, டெல்லி அணி முதலில் மட்டையாட்டம் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். சர்பராஸ் கானுடன் மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணியின் எண்ணிக்கை 51 ஆக இருந்தபோது சர்பராஸ் கான் 32 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். லலித் யாதவ் 24 ஓட்டத்தில் அவுட்டானார்.

பொறுப்புடன் ஆடிய மிட்செல் மார்ஷ் அரை சதமடித்து 63 ஓட்டத்தில் வெளியேறினார்.

இறுதியில், டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 சுற்றில் 7 மட்டையிலக்கு இழப்புக்கு 159 ஓட்டங்கள் எடுத்தது.

பஞ்சாப் அணி சார்பில் லிவிங்ஸ்டோன், அர்ஷ்தீப் சிங் தலா 3 மட்டையிலக்கு, ரபாடா ஒரு மட்டையிலக்கு வீழ்த்தினர். இதையடுத்து 160 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்குகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »