Press "Enter" to skip to content

ஐபிஎல் கிரிக்கெட்- பஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி

முதலில் விளையாடிய டெல்லி அணியில் மிட்செல் மார்ஷ் 63 ஓட்டங்கள் குவித்திருந்தார்.

மும்பை:

ஐபிஎல் தொடரின் 64-வது லீக் ஆட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் டெல்லி கேபிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து களம் இறங்கிய டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். பின்னர் சர்பராஸ் கானுடன் மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

அணியின் எண்ணிக்கை 51 ஆக இருந்தபோது சர்பராஸ் கான் 32 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். லலித் யாதவ் 24 ஓட்டத்தில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய மிட்செல் மார்ஷ் அரை சதமடித்து 63 ஓட்டத்தில் வெளியேறினார்.  டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 சுற்றில் 7 மட்டையிலக்கு இழப்புக்கு 159 ஓட்டங்கள் எடுத்தது.

பஞ்சாப் அணி சார்பில் லிவிங்ஸ்டோன், அர்ஷ்தீப் சிங் தலா 3 மட்டையிலக்குடையும், ரபாடா ஒரு மட்டையிலக்கு வீழ்த்தினர். 

இதையடுத்து 160 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோவ் 28 ரன்களும், ஷிகர் தவான் 19 ரன்களும் அடித்தனர். பானுகா ராஜபக்சே 4 ரன்னுடன், லிவிங்ஸ்டோன் 3 ரன்னுடன் வெளியேறினர். 

கேப்டன் மயங்க் அகர்வால் ஓட்டத்தை எதுவும் எடுக்காத நிலையில் மட்டையிலக்குடை இழந்தார்.  பொறுப்புடன் விளையாடிய ஜிதேஷ் சர்மா  44 ஓட்டங்கள் எடுத்தார். ராகுல் சாஹர் 25 ஓட்டங்கள் அடித்து களத்தி இருந்தார். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 9 மட்டையிலக்கு இழப்பிற்கு 142 ஓட்டங்கள் அடித்தது. 

இதையடுத்து 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.  அந்த அணி சார்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 4 மட்டையிலக்குகளையும், அக்சர் படேல் 2 மட்டையிலக்குகளையும் கைப்பற்றினர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »