Press "Enter" to skip to content

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்- ஸ்ரீகாந்த் 2ம் சுற்றுக்கு முன்னேற்றம்

ஸ்ரீகாந்த் தலைமையிலான இந்திய ஆடவர் அணி, கடந்த ஞாயிற்றுக்கிழமை தாமஸ் கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியது.

பாங்காக்:

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில், இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார். இவர், ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் பிரைஸ் லெவர்டெசை, 18-21 21-10 21-16 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார். அடுத்து அயர்லாந்து வீரர் நிகுயென்னை எதிர்கொள்கிறார் ஸ்ரீகாந்த்.

ஸ்ரீகாந்த் தலைமையிலான இந்திய ஆடவர் அணி, கடந்த ஞாயிற்றுக்கிழமை தாமஸ் கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியது. 14 முறை சாம்பியன் பட்டம் வெற்ற இந்தோனேசிய அணியை இறுதிச்சுற்றில் இந்திய அணி வீழ்த்தி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்து. 

தாய்லாந்து ஓபன், மகளிர் ஒற்றையர் பிரிவில் தகுதி சுற்று மூலம் பங்கேற்ற இந்திய வீராங்கனை அஷ்மிதா சாலிகா, தாய்லாந்து வீராங்கனை ரட்சனோக் இன்டானனிடம் 10-21 15-21 என்ற நேர்செட்களில் தோல்வியடைந்து வெளியேறினார். மற்றொரு வீராங்கனை ஆகார்ஷி காஷ்யப், கனடாவின் மிச்செல்லியிடம் 13-21 18-21 என்ற நேர்செட்களில் தோல்வி அடைந்தார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் சுமீத் ரெட்டி, அஷ்வினி பொன்னப்பா ஜோடியும் முதல் சுற்றை தாண்டவில்லை. இவர்கள் முதல் சுற்றில் ஜப்பானின் யுகி கனேகோ- மிசாகி மட்சுடோமோ ஜோடியிடம் 17-21 17-21 என தோல்வியடைந்தது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »