Press "Enter" to skip to content

ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு 160 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டெல்லி

இன்றைய போட்டியின் முடிவு, பிளே ஆப் சுற்றில் நுழையும் 4வது அணி டெல்லியா, பெங்களூரா? என்பதை தீர்மானிக்கிறது.

மும்பை:

மும்பையில் இன்று நடைபெறும் 69 வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, டெல்லி அணி மட்டையாட்டம் செய்தது. 

முதலில் களம் இறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்ன்ர் 5 ரன்னுக்கும், பிருத்வி ஷா 24 ரன்களும், ஆட்டமிழந்தனர். 

மிக்சேல் மார்ஷ் ஓட்டத்தை எதுவும் எடுக்காத நிலையில், மட்டையிலக்குடை இழந்தார்.  கேப்டன் ரிஷப் பந்த் 39 ஓட்டங்கள் எடுத்தார்.சர்பராஸ்கான் 10 ரன்னுடன் வெளியேற,  ராவன் பவல் 43 ஓட்டங்கள் குவித்தார். 

20 சுற்றுகள் முடிவில் டெல்லி அணி 7 மட்டையிலக்கு இழப்பிற்கு 159 ஓட்டங்கள் அடித்தது.

இதையடுத்து 160 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி மும்பை அணி களம் இறங்குகிறது. 

இன்றைய போட்டியின் முடிவு,  பிளே ஆப் சுற்றில் நுழையும் 4வது அணி டெல்லியா, பெங்களூரா? என்பதை தீர்மானிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »