Press "Enter" to skip to content

பிரெஞ்ச் ஓபன் – முன்னாள் சாம்பியன் முகுருசா முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி

முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் வீராங்கனை பிரெஞ்ச் ஓபன் முகுருசா தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பாரீஸ்:

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி அந்நாட்டு தலைநகர் பாரீசில் நேற்று தொடங்கியது.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கார்பின் முகுருசா, எஸ்டோனியா நாட்டைச் சேர்ந்த கையா கனேபியை எதிர்கொண்டார்.

முதல் சுற்றை முகுருசா 6-2 என எளிதில் வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட கனேபி இரண்டாவது சுற்றை 6-3 என கைப்பற்றினார்.

இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றிலும் சிறப்பாக ஆடிய கனேபி 6-4 என்ற கணக்கில் வென்றார்.

இதன்மூலம் கனேபி 2-6, 6-3, 6-4 என்ற செட்களில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »