Press "Enter" to skip to content

மில்லரை நினைத்து பெருமைப்படுகிறேன்- குஜராத் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா பாராட்டு

நான் எந்த வரிசையில் மட்டையாட்டம் செய்ய வேண்டும் என்று விரும்பியது இல்லை. அணிக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுக்கிறேன் என குஜராத் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

கொல்கத்தா:

ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த குவாலிபையர்-1 ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 சுற்றில் 6 மட்டையிலக்கு இழப்புக்கு 188 ஓட்டத்தை குவித்தது. இதனால் குஜராத் அணிக்கு 189 ஓட்டத்தை இலக்காக இருந்தது.

ஜோஸ்பட்லர் 56 பந்தில் 89 ரன்னும் ( 12 பவுண்டரி , 2 சிக்சர் ) , கேப்டன் சஞ்சு சாம்சன் 26 பந்தில் 47 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர் ) எடுத்தனர். முகமது ஷமி , தயாள், சாய் கிஷோர் ஹர்திக் பாண்ட்யா தலா 1 மட்டையிலக்கு வீழ்த்தினார்கள்.

பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.3 சுற்றில் 3 மட்டையிலக்கு இழப்புக்கு 191 ஓட்டத்தை எடுத்து 7 மட்டையிலக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

டேவிட் மில்லர் 38 பந்தில் 68 ரன்னும் (3 பவுண்டரி, 5 சிக்சர்) , கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 27 பந்தில் 40 ரன்னும் ( 5 பவுண்டரி ) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். சுப்மன் கில் 21 பந்தில் 35 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்), மேத்யூ வேட் 30 பந்தில் 35 ரன்னும் (6 பவுண்டரி) எடுத்தனர். மிகுதியாக பகிரப்பட்டது போல்ட், மெக்காய் தலா 1 மட்டையிலக்கு கைப்பற்றினார்கள்.

புதுமுக அணியான குஜராத் தனது முதல் சீசனிலேயே இறுதிப் போட்டிக்குள் நுழைந்து சாதித்தது.

குஜராத் அணியின் வெற்றிக்கு காரணமான டேவிட் மில்லரை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பாராட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் வெவ்வேறு மாதிரியானவர்கள். நான் அவர்களை மதிக்கிறேன்.

ரஷீத்கான் பந்து வீச்சு நன்றாக இருந்தது. மீண்டும் அவருக்கு பந்து வீச்சில் நல்ல நாளாக அமைந்தது. இந்த தொடர் முழுவதும் அவர் கிரிக்கெட் பயணம் அற்புதமாக இருந்தது.

இந்த போட்டித் தொடரில் டேவிட் மில்லர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

நான் எந்த வரிசையில் மட்டையாட்டம் செய்ய வேண்டும் என்று விரும்பியது இல்லை. அணிக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுக்கிறேன்.

நான் எனது வாழ்க்கையில் பல்வேறு விஷயங்களை சமநிலைப்படுத்த தொடங்கி விட்டேன். கடந்த 2 ஆண்டுகளாக இது ஒரு நிலையான முயற்சியாகும். என்னை சிறந்த கிரிக்கெட் வீரராக மாற்ற குடும்பம் உதவியது.

இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா கூறினார்.

தோல்வி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:-

முதலில் ஆடி 188 ஓட்டத்தை குவித்தது மகிழ்ச்சியை அளித்தது. இது நல்ல ஸ்கோர்தான் என்று கருதினோம். ஆனால் ஈடன் கார்டன் மைதானத்தில் 2-வது மட்டையாட்டம் செய்வது எளிதாக இருந்தது.

இந்தப் போட்டி தொடரில் அதிர்ஷ்டம் (டாஸ்) முக்கிய பங்கு வகிக்கிறது. சில விஷயங்கள் நமது கட்டுப்பாட்டில் இல்லை. அடுத்தப் போட்டியில்நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »