Press "Enter" to skip to content

அணி வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்- சஞ்சு சாம்சன்

நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடி ரசிகர்களுக்கு சில மகிழ்ச்சியான தருணங்களை கொடுத்தோம் என ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:-

இந்த பருவம் எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடி ரசிகர்களுக்கு சில மகிழ்ச்சியான தருணங்களை கொடுத்தோம்.

இளம் வீரர்கள், சீனியர்கள் என அனைவரும் ஒரு அணியாக சிறப்பாக விளையாடினர். அணி வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். போட்டியில் பந்து வீச்சாளர்கள் வெற்றி பெற வைப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

இதனால் ஏலத்தில் அவர்கள் மீது முதலீடு செய்து எடுத்தோம். இன்றைய நாள் (நேற்று) எங்களுக்கு சிறப்பாக அமையவில்லை. கோப்பையை வென்ற குஜராத் அணிக்கு வாழ்த்துக்கள் என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »