Press "Enter" to skip to content

ஐபிஎல் பருவத்தில் அதிக ஓட்டங்கள் – வார்னர் சாதனையை முறியடித்த ஜோஸ் பட்லர்

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியை ஜோஸ் பட்லர் பெற்றார்.

அகமதாபாத்:

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில், குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற ராஜஸ்தான் மட்டையாட்டம் தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 மட்டையிலக்குடுக்கு 130 ஓட்டங்கள் எடுத்தது. 

இதையடுத்து, 131 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. அந்த அணி 18.1 சுற்றில் 3 மட்டையிலக்குடுக்கு 133 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன் கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது. 

நடப்பு ஐபிஎல் தொடரில் 4 சதங்களுடன் அதிக ஓட்டங்கள் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியை ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லர் கைப்பற்றினார்.

இந்நிலையில், நேற்றைய போட்டியில் ஜோஸ் பட்லர் புதிய சாதனை படைத்தார். ஒரு ஐபிஎல் பருவத்தில் அதிக ஓட்டங்கள் அடித்தவர்களுக்கான வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னரை பின்னுக்குத் தள்ளி பட்லர் 2-வது இடத்தை பிடித்தார். பட்லர் இதுவரை 863 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

இந்தப் பட்டியலில் பெங்களூரு அணியின் விராட் கோலி (973 ஓட்டங்கள் – 2016 ஆம் ஆண்டு ) முதல் இடத்தில் உள்ளார். 3-வது இடத்தில் டேவிட் வார்னர் (848 ஓட்டங்கள் – 2016) உள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »