Press "Enter" to skip to content

பாஜகவின் ஊதுகுழலாக ரஜினி இருப்பது என்ன தவறு? எஸ்வி சேகர் கேள்வி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது முதல்முறையாக சிஐஏ மற்றும் என்.ஆர்.சி சட்டங்கள் குறித்த தனது கருத்தை தெரிவித்தார்

இந்த சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு எந்த வித பாதிப்பும் இருக்காது என்றும் அவ்வாறு ஒருவேளை பாதிப்பு ஏற்பட்டால் நானே முதல் ஆளாக நின்று குரல் கொடுப்பேன் என்றும் தெரிவித்தார்

மேலும் இன்றைய சூழ்நிலையில் இந்தியாவிற்கு என்.ஆர்.சி அரசு சட்டம் மிகவும் அவசியம் என்றும் இந்த சட்டத்தால் தான் வெளிநாட்டில் இருந்து ஊடுருவியுள்ளவர்களை கண்டுபிடிக்க முடியும் என்றும் தெரிவித்தார்
ரஜினியின் இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்ததோடு அவர் பாஜகவின் ஊதுகுழலாக செயல்படுவதாகவும் விமர்சனம் செய்தனர்

இந்த நிலையில் இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த நடிகர் எஸ்வி சேகர் திகவின் ஊதுகுழலாக திமுக இருக்கும்போது பாஜகவின் ஊதுகுழலாக ரஜினிகாந்த் இருப்பதில் எந்தவித தவறும் இல்லை என்றும் அதற்காக வெட்கப்படவேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்

குடியுரிமை சட்ட விவகாரத்தில் ஒரு சிறந்த தேசியவாதியாக ரஜினிகாந்த் கருத்துக் கூறியுள்ளார் என்றும் எஸ்வி சேகர் கூறியுள்ளார்

The post பாஜகவின் ஊதுகுழலாக ரஜினி இருப்பது என்ன தவறு? எஸ்வி சேகர் கேள்வி appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

More from திரையுலகம்More posts in திரையுலகம் »