தாய்லாந்து நாட்டில் ராணுவ வீரர் ஒருவரே கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி 17 பொது மக்களை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தாய்லாந்து நாட்டில் கொராட் என்ற பகுதியில் ராணுவ வீரர் ஒருவர் திடீரென தனது துப்பாக்கியை எடுத்து பொதுமக்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது
தாய்லாந்து நாட்டில் உள்ள ஷாப்பிங் சென்டரில் நடந்த இந்த கொடூர சம்பவத்தின் காரணமாக அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ராணுவ வீரரை கைது செய்து தாய்லாந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் எதற்காக இவ்வாறு கண்மூடித்தனமாக சுட்டார் என்பது இப்போதுவரை தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை
The post கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்திய ராணுவ வீரர்: 17 பொதுமக்கள் பரிதாப பலி appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes