Press "Enter" to skip to content

சமூக சேவகர் பாலம் கல்யாணசுந்தரம் வாழ்க்கைக் கதை திரைபடம்கில் அமிதாப் பச்சன்

தமிழகத்தை சேர்ந்த சமூக சேவகர் பாலம் கல்யாணசுந்தரத்தின் வாழ்க்கை படத்தில் அமிதாப் பச்சன் நடிக்க உள்ளார்.

வாழ்க்கை வரலாறு படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோரின் வாழ்க்கை படங்கள் வந்துள்ளன. இந்த வரிசையில் சமூக சேவகர் பாலம் கல்யாணசுந்தரம் வாழ்க்கையும் படமாகிறது. இவர் பாலம் அமைப்பு மூலம் சமூக சேவை பணிகள் செய்துவருகிறார். அமெரிக்காவில் வழங்கப்பட்ட ரூ.30 கோடி பரிசு தொகையை பொதுத்தொண்டுக்கே திருப்பி கொடுத்தார்.

ஆங்கிலத்தில் வெளியான பாலம் கல்யாணசுந்தரம் வாழ்க்கை கதை புத்தகத்தை படித்த அமிதாப்பச்சன், அவரது வாழ்க்கை என்னை நெகிழச்செய்கிறது. அவரது வாழ்க்கை கதை படத்தில் நானே நடிக்கிறேன். பாலம் கல்யாணசுந்தரத்தின் இளமைக்கால கதாபாத்திரத்தில் எனது மகன் அபிஷேக்பச்சன் நடிப்பார் என்று இந்தி தயாரிப்பாளர் பரண் ஆதர்ஷிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து தயாரிப்பாளர் பரண் ஆதர்ஷ் சென்னை வந்து பாலம் கல்யாணசுந்தரத்தை சந்தித்து பேசி, பட வேலைகளை தொடங்கி உள்ளார். பாலம் கல்யாணசுந்தரத்தின் தாய் வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார். தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில் இந்த படம் தயாராகிறது. படத்துக்கு கிடைக்கும் ராயல்டி தொகையை பொதுத்தொண்டுக்கு வழங்க பாலம் கல்யாணசுந்தரம் முடிவு செய்துள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »