Press "Enter" to skip to content

மனக்கவலையினால் என்னையும் என் அம்மாவையும் நினைக்க மறந்துவிட்டேன் – அமலாபால் உருக்கம்

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் அமலாபால், மனக்கவலையினால் என்னையும் என் அம்மாவையும் நினைக்க மறந்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார்.

அமலாபால் நடிப்பில் தற்போது அதோ அந்த பறவை போல திரைப்படம் உருவாகி உள்ளது. கே.ஆர்.வினோத் இயக்கியுள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

சமீபத்தில் நடிகை அமலா பாலின் தந்தை பால் வர்க்கீஸ் கடந்த ஜனவரி மாதம் காலமானார். இந்நிலையில் தற்போது அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவை எழுதியுள்ளார்.

அதில், ”பெற்றோர்களை இழப்பது என்பது வார்த்தைகளால் விளக்க முடியாதது. எனது அப்பாவை இழந்த பிறகு வாழ்க்கையின் புதிய பரிணாமத்தை பார்க்கிறேன். நாம் வளர வளர நம்மிடம் இருக்கும் குழந்தைத்தன்மையை பாக்ஸில் வைத்து மூடிவிடுகிறோம். நம்மை நாமே நேசிக்க மறந்துவிடுகிறோம்.

எப்பொழுது நாம் நம்மை முழுவதுமாக நேசிக்க கற்கப்போகிறோம் ? நம் அம்மாக்கள் அவர்களை நேசிக்க மறந்துவிட்டார்கள். அவர்கள் தங்கள் முழுவாழ்வையும் தங்கள் கணவருக்காக குடும்பத்தினருக்காக செலவிடுகின்றனர்.

நான் மனக்கவலையினால் என்னையும் என் அம்மாவையும் நினைக்க மறந்துவிட்டேன். ஆனால் இப்பொழுது அன்பின் வழியே எங்களை நாங்கள் பீனிக்ஸ் போல மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »