Press "Enter" to skip to content

கவுதம் மேனன் இனிமேல் அப்படி செய்யாதீங்க… டேனியல் பாலாஜி வேண்டுகோள்

கவுதம் மேனன் இனிமேல் அப்படி செய்யாதீங்க என்று டேனியல் பாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திரம் மற்றும் வில்லன் நடிகராக திகழ்பவர் டேனியல் பாலாஜி. இவர் கவுதம் மேனன் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தில் அமுதன் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் தனக்கே உரிய பாணியில் பல படங்களில் நடித்து பல ரசிகர்களை தன் வசமாக்கியுள்ளார்.

தற்போது கவுதம் மேனன், கமல் கூட்டணியில் வேட்டையாடு விளையாடு படத்தின் 2 ம் பாகம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பீர்களா என்று ஒரு பேட்டியில் டேனியல் பாலாஜி கேட்கப்பட்டது. 

இதற்கு அவர், முதல் பாகத்தில் என்னை கொன்று விட்டார்கள். அதனால் இரண்டாம் பாகத்தில் எனக்கு  வேலை இருக்காது என்று நினைக்கிறேன். இப்போ கவுதம் மேனனுக்கு நிறைய பெரிய நடிகர்கள் தெரியும். அவரே  நடிக்கவும் செய்கிறார். அதனால் எனக்கு வாய்ப்பு குறைவுதான். 

கவுதம் மேனனுக்கு ஒன்னு சொல்லணும் ஆசைப்படுகிறேன், ‘என்னை அறிந்தால் படத்தில் நான் ரெண்டு சீன்ல நடித்தேன். அதில் ஒரு சீனை எடுத்து விட்டு ஒன்றுதான் வைத்தார்கள். அப்போது கவுதம்மேனன் அருண்விஜய்யிடம் என்னுடைய உடல் மொழி, மேனரிசம் ஆகியவற்றை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். மேலும், அவன் எப்படி பார்க்கிறான், எப்படி திரும்புகிறான் என்பதை கவனிக்க சொன்னார். அது தவறு, இதுபோல் அவர் செய்ய கூடாது. ஒரு கேரக்டரை வேற மாதிரி கிரியேட் பண்ணுனுமே தவிர அதே மாதிரி உருவாக்க கூடாது’ என்றார்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »