Press "Enter" to skip to content

ஊரடங்கை மீறிய பிரபல நடிகை கைது

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறியதாக பிரபல நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக அந்த நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான லாகோசில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் அந்த நகரில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கும், திருமணம், இறுதி சடங்குகளில் மக்கள் அதிகமாக கூடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த நாட்டின் பிரபல நடிகையான பன்கே அகிண்டெலே உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோரை வீட்டுக்கு வரவழைத்து தனது கணவரின் பிறந்தநாளை கோலகலமாக கொண்டாடினர். மேலும் அவர் மது, ஆடல், பாடல் என களைகட்டிய விருந்து நிகழ்ச்சியை வீடியோ பதிவுசெய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

பிறந்தநாள் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் பல நாட்களாக தனது வீட்டிலேயே தங்கியிருப்பதாகவும், யாரும் வெளியே இருந்து வரவில்லை என்றும் கூறி நடிகை பன்கே அகிண்டெலே தனது செயலை நியாப்படுத்தினார். ஊரடங்கு உத்தரவை மீறியதாக கூறி அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருக்கு 260 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.20 ஆயிரம்) அபராதமும் விதித்தனர்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »