Press "Enter" to skip to content

மீண்டும் இணைந்த சென்னை-28 கூட்டணி : பாய்ஸ் ஆர் பேக்

கொரோனா லாக்டவுன் நிலையில் வெங்கட்பிரபுவின் சென்னை 28 கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான படம் சென்னை 28. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து இதன் 2 ஆம் பாகமும் வெளியானது. இதில் சிவா, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

தற்போது கொரோனா லாக்டவுன் நிலையிலும் இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது.

கொரோனாவை தடுக்கும் வழிமுறைகள் பற்றி பிரபலங்கள் பலரும் வீடியோ வெளியிட்டு மக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வரிசையில் இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு சின்ன விடியோவை இயக்கி வெளியிட்டுள்ளார். தனது வீட்டில் இருந்தபடியே சென்னை 28 படத்தின் நடித்தவர்களை அவர்கள் வீட்டில் இருந்தபடியே நடிக்கவைத்து அந்த வீடியோவை உருவாக்கியுள்ளார் வெங்கட் பிரபு.

கையை சோப்பு போட்டு கழுவவேண்டும், சானிடைசர் பயன்படுத்தவேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட பல கருத்துக்களை அவர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »