Press "Enter" to skip to content

அமெரிக்காவில் சரியான தங்குமிடம் இல்லை…. நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் நடிகை

அமெரிக்காவில் சரியான தங்கும் இடம் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் தவித்து வருவதாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

அனுபம் கெர் தயாரித்த ராஞ்சி டைரிஸ் படம் மூலம் அறிமுகமானவர் சவுந்தர்யா சர்மா. இந்த படத்துக்காக சில பட விழாக்களில் அறிமுக நடிகை விருதை வாங்கினார். பல் மருத்துவரான இவர், நடிப்பு ஆர்வம் காரணமாக, தேசிய நாடகப்பள்ளியில் பயின்றார். சொந்தமாக மஸ்டர்ட் அண்ட் ரெட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். 

இதன் மூலம் படங்கள் தயாரிக்க இருக்கிறார். இவர் தனது அடுத்த பட வேலைகளுக்காக, அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பிலிம் அகாடமியில் நடக்கும் ஒர்க்‌ஷாப்பில் கலந்துகொள்ள சென்றிருந்தார். கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அங்கு சிக்கியுள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோரதாண்டவம் ஆடுகிறது. இந்நிலையில் நியூயார்க்கில் சிக்கியுள்ள சவுந்தர்யா, மாணவர்களை மீட்க இந்திய அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். ‘சுமார் 400 மாணவர்கள் இங்கு சிக்கியுள்ளனர். வாழ்வதற்கு கடினமான சூழல் நிலவுகிறது. ஒவ்வொருவருக்கும் சவாலான நேரம். 

சரியான தங்கும் இடம் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் மாணவர்கள் தவித்து வருகிறார்கள். இந்திய தூதரகம் அவர்களுக்கு எந்த உதவியையும் செய்யவில்லை. அதனால் மத்திய வெளியுறவு அமைச்சகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கோரிக்கை வைத்துள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »