கொரோனா ஊரடங்கு உத்தரவில் தீவிரமாக வேலை செய்துவரும் போலீசாருக்கு நடிகர் யோகிபாபு உதவி செய்திருக்கிறார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. அதனால் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகாக போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோன தடுப்பு நடவடிக்கைகளில் அரசுக்கு உதவ பல்வேறு நடிகர்களும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் யோகி பாபு 24 மணி நேரமும் தங்கள் பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் உழைத்துக் கொண்டிருக்கும் போலீசாருக்கு உதவும் வகையில் அவர்களுக்கு என்95 மாஸ்க் மற்றும் எனெர்ஜி பானங்களை வாங்கி கொடுத்துள்ளார்.
யோகி பாபு இதற்கு முன்பு வேலை இன்றி தவித்து வரும் சினிமா தொழிலாளர்களுக்கு 1250 கிலோ அரிசி வாங்கி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Malai Malar