பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட இர்ஃபான் கான் லண்டனில் உயர்தர சிகிச்சைகளை மேற்கொண்டு கடந்த ஆண்டு மீண்டும் நடிக்க வந்தார்.
கடந்த சனிக்கிழமை இவரின் தாயார் சாயிதா பேகம், 95, ஜெய்ப்பூரில் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் போடப்பட்டுள்ளதால், ஜெய்பூருக்கு செல்ல முடியாத நிலையில், வீடியோ காலில் அழுத படி தாயின் இறுதி சடங்குகளை இர்ஃபான் கான் பார்த்தார்.
இந்நிலையில், திடீரென இர்ஃபான் கான் உடல்நலத்தில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டதால், தற்போது மீண்டும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Source: Malai Malar