Press "Enter" to skip to content

ஊரடங்கில் கணவருடன் நடுரோட்டில் ஆட்டம் – ஸ்ரேயா வெளியிட்ட காணொளிவால் சர்ச்சை

ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் ஸ்ரேயா நடுரோட்டில் கணவருடன் நடனமாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில், மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விக்ரமின் கந்தசாமி, ஜீவாவின் ரௌத்ரம் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரேயா. இந்தி, தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு ஸ்ரேயா கணவருடன் பார்சிலோனாவில் வசித்து வருகிறார். 

இந்நிலையில் ஸ்ரேயாவும் அவரது கணவரும் பார்சிலோனா நகரில் நடுரோட்டில் மாஸ்க் எதுவும் அணியாமல் நடனம் ஆடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். பார்சிலோனாவில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் ஸ்ரேயா நடுரோட்டில் கணவருடன் நடனமாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »