தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வரும் கதிர், அவர்களின் வேலை நமக்கு ஒர்க்கவுட் என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வருபவர் கதிர். இவர் நடித்த கிருமி, விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக பரியேறும் பெருமாள் படத்தில் இவரது நடிப்புக்காக விருதுகளும் கிடைத்தது.
இந்நிலையில் நடிகர் கதிர் தனது ட்விட்டர் பக்கத்தில் மண்வெட்டியை வைத்து மண் அள்ளிப்போடும் போட்டோவை பகிர்ந்துள்ள அவர், விவசாயிகளின் அன்றாட வேலைதான், சிட்டி வாழ்க்கையில் ஒர்க் அவுட்டாம். என்ன சொல்றது போங்க…’ எனவும் அவர் பதிவிட்டுள்ளார். கதிரின் இந்த பதிவு ரசிகர்களை கவர்ந்துள்ளது.
Related Tags :
Source: Malai Malar