கமல் நடிப்பில் உருவாக இருக்கும் படத்தில் ஏற்கனவே அவருடன் நடித்த இரண்டு நடிகைகள் நடிக்க இருக்கிறார்கள்.
இந்தியன்-2 படத்துக்கு பிறகு கமல்ஹாசன் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் நடிக்கிறார். இது தேவர் மகன் படத்தின் 2-ம் பாகம் என்று கூறப்படுகிறது.
இப்படத்தில் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று ஏற்கனவே தகவல் கசிந்தது. முதல் பாகத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து கமல்ஹாசன் கையால் கொல்லப்படும் நாசரின் மகனாக விஜய்சேதுபதி நடிப்பதாக கூறப்படுகிறது. நகைச்சுவை வேடத்துக்கு வடிவேல் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கதாநாயகியாக நடிப்பது யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில் படத்தில் 2 கதாநாயகிகள் உள்ளதாகவும், அதற்கு பூஜா குமார், ஆண்ட்ரியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் இருவரும் ஏற்கனவே கமல்ஹாசனுடன் விஸ்வரூபம் மற்றும் உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Malai Malar