Press "Enter" to skip to content

சில சமயங்களில் 100ஐ விட ஐம்பதே சிறந்தது – நடிகர் அரவிந்த் சாமி சூசகம்

திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், சில சமயங்களில் 100ஐ விட ஐம்பதே சிறந்தது என அரவிந்த் சாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. சுமார் 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் கடந்த நவம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்டு 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது. 

பொங்கலுக்கு மக்கள் விரும்பத்தக்கதுடர், ஈஸ்வரன் உள்ளிட்ட படங்கள் ரிலீசாக உள்ளதால், திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்குமாறு நடிகர் விஜய் கடந்த வாரம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கோரிக்கை வைத்தார். 

இதையடுத்து திரையரங்கம்கள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளித்து தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டது. இதுகுறித்து பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், அரசின் இந்த முடிவு குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் அரவிந்த்சாமி “சில சமயங்களில் 50 சதவீதம் என்பது 100 சதவீதத்தை விட சிறந்ததாகவே இருக்கும். அதில் இதுவும் ஒன்று” என கூறியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »