பிரபல ஆபாச நடிகை சன்னி லியோன், ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.
பிரபல ஆபாச பட நடிகை சன்னி லியோன். இவர் படப்பிடிப்புக்கு கேரள மாநிலம் வந்துள்ளார். கணவர் டேனியல் மற்றும் 3 வளர்ப்பு குழந்தைகளுடன் திருவனந்தபுரத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்கி உள்ளார்.
இந்நிலையில் சன்னி லியோன், கேரள வழக்கப்படி அழகான சேலை கட்டி, தலையில் மல்லிகைப்பூ வைத்துக்கொண்டு, தான் தங்கியுள்ள விடுதியில் தோற்றம் அளிக்கும் போட்டோவை விடுதி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அவரது கணவர் டேனியல், வேட்டியும், குர்தாவும் அணிந்திருக்க, குழந்தைகள் டவுசர்- சட்டையில் பாவனை கொடுத்துள்ளனர்.
சன்னி லியோன் சேலை அணிந்துள்ள போட்டோ, ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த புகைப்படம் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.
[embedded content]
Source: Malai Malar