கீர்த்தி சுரேஷ் – மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் வெளியீடு தேதி மாற்றப்பட்டுள்ளது.
16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்காயர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்காயர் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்ற படம் தயாராகி உள்ளது. ரூ.100 கோடி செலவில் தயாராகியுள்ள இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார்.
இதில் குஞ்சலி மரைக்காயர் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார். நடிகைகள் கீர்த்தி சுரேஷும், மஞ்சு வாரியரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் அர்ஜுன், சுனில் ஷெட்டி, அசோக் செல்வன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் தயாராகி உள்ளது.
இப்படத்தை கடந்தாண்டு மார்ச் மாதமே வெளியீடு செய்ய திட்டமிட்டிருந்தனர். இருப்பினும் கொரோனா லாக்டவுன் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இதையடுத்து வருகிற மார்ச் 26-ந் தேதி திரையரங்கம்களில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தனர். இந்நிலையில், படத்தின் வெளியீடு தேதியை மீண்டும் மாற்றி உள்ளனர். அதன்படி வருகிற மே 13-ந் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
[embedded content]
Source: Malai Malar