Press "Enter" to skip to content

காதல் கணவரை கன்னத்தில் அறைந்த நடிகை – மிகுதியாகப் பகிரப்படும் காணொளி

நடிகை அனிதா ஹசானந்தனி, கடந்த 2013-ம் ஆண்டு ரோகித் ரெட்டி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தமிழில் வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் அறிமுகமானவர் அனிதா ஹசானந்தனி. விக்ரம் நடித்த சாமுராய், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சுக்ரன், மகாராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஐஸ்வர்யாராயின் தால் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தெலுங்கு, இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். 

கடந்த 2013-ம் ஆண்டு, ரோகித் ரெட்டி என்பவரை அனிதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த பிப்ரவரி 9-ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆரவ் ரெட்டி என்று பெயர் வைத்துள்ளனர். 

இந்நிலையில், நடிகை அனிதா ஹசானந்தனி, தனது கணவரை கன்னத்தில் அறையும் காணொளி ஒன்று வெளியாகி உள்ளது. இந்த காணொளியை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அனிதாவின் கணவர் ரோகித் ரெட்டி, இதனால் தான் தனக்கு ரீல்ஸ் பிடிக்காது என சோகத்துடன் குறிப்பிட்டுள்ளார். 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »