Press "Enter" to skip to content

கொரோனா பாதித்த நிலையிலும் உதவி செய்து வரும் சோனு சூட்

கொரோனா ஊரடங்கு நேரத்தில் பொது மக்களுக்கு பல உதவிகளை செய்து வந்த நடிகர் சோனு சூட், கொரோனா பாதித்த நிலையிலும் உதவி செய்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கு நேரத்தில் பல உதவிகளை செய்தவர் சோனு சூட். கடந்த சில நாட்களுக்கு முன் சோனு சூட்டிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

கொரோனாவால் சிகிச்சையில் இருந்து வரும் நிலையிலும் சமூக சேவையை தொடர்ந்து வருகிறார் சோனு சூட். தேவைப்படுபவர்களுக்கு அவர்களுக்கான உதவிகளை சமூக வலைதளங்கள் மூலமே செய்து வருகிறார். 

சமீபத்தில் ஒருவர், கொரோனாவால் தனது தந்தைக்கு 75 சதவீதம் நுழையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குர்கான் மருத்துவமனையில் படுக்கை வசதி அளிக்கப்படாததால் தவித்து வருவதாக சோனு சூட்டிற்கு தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளித்த சோனு சூட், அடுத்த அரை மணி நேரத்தில் படுக்கை வசதி கிடைத்து விடும். அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறேன். உங்கள் தந்தை விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். சொன்னபடியே அவருக்கு உதவியும் செய்துள்ளார் சோனு சூட். இதுபோல் பலருக்கும் பல உதவிகளை செய்து வருகிறார் சோனு சூட்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »