இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்துள்ள நிலையில், விஜய் சொன்னதன் பேரில் ரசிகர்கள் களத்தில் இறங்கி உதவி செய்து இருக்கிறார்கள்.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்துள்ள நிலையில், தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைக்க உள்நாட்டில் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.
ஒருபுறம் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. மேலும் நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் விஜய் சொன்னதன் பேரில் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் தேவைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களும் மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்களுக்கு தேவையான முகக் கவசங்கள், கையுறைகள் விஜய் மக்கள் இயக்கத்தினரால் வழங்கப்பட்டன.
[embedded content]
Source: Malai Malar