Press "Enter" to skip to content

சித்ரா புகைப்படத்திற்குஇனிப்புக்கட்டி (கேக்) ஊட்டி கண்கலங்கிய தந்தை

தொகுப்பாளினி, சின்னத்திரை நடிகை என பல முகங்களை கொண்ட மறைந்த நடிகை சித்ராவின் புகைப்படத்திற்குஇனிப்புக்கட்டி (கேக்) ஊட்டி அவரது தந்தை கண்கலங்கி இருக்கிறார்.

பிரபல தொகுப்பாளினி, சின்னத்திரை நடிகை என பல முகங்களை கொண்டவர் நடிகை சித்ரா. இவர் கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி நள்ளிரவில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது தற்கொலைக்கு காதல் கணவர் ஹேமந்த்தான் காரணம் என விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து அவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில் விஜே சித்ராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பெற்றோர் தங்களின் காவல் துறை குடியிருப்பில் அவரது பிறந்த நாளை கொண்டாடினர். சித்ரா போட்டோவுக்கு முன்னால் அவருக்கு பிடித்த பொருட்களை வைத்தும்இனிப்புக்கட்டி (கேக்) வெட்டியும் பிறந்த நாளை கொண்டாடினர்.

சித்ரா

அப்போது சித்ராவின் தந்தை சித்ராவின் போட்டோவுக்குஇனிப்புக்கட்டி (கேக்) ஊட்டிவிட்டு கலங்கினார். காண்போரை கலங்க வைக்கும் இந்த காணொளி சமூக வலைதளங்களில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »