தமிழில் ரஜினியின் பேட்ட, விஜய்யுடன் மக்கள் விரும்பத்தக்கதுடர் போன்ற படங்களில் நடித்து பிரபலமான மாளவிகா மோகனன், அடுத்ததாக இயக்குனர் ஷங்கரின் படத்தில் நடிக்க உள்ளாராம்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படத்தில் ராம் சரண் கதாநாயகனாக நடிக்கிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகும் இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.
ராம்சரண், மாளவிகா மோகனன்
இந்நிலையில், இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கூட்டணி உறுதியானால், அவர் தெலுங்கில் நடிக்கும் முதல் படமாக இது அமையும். நடிகை மாளவிகா மோகனன், தமிழில் ரஜினியுடன் பேட்ட, விஜய்க்கு ஜோடியாக மக்கள் விரும்பத்தக்கதுடர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது அவர் கைவசம் தனுஷின் ‘டி 43’ என்கிற தமிழ் படமும், யுத்ரா என்கிற இந்தி படமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
[embedded content]
Source: Malai Malar