Press "Enter" to skip to content

வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக புகார் – பிரபல நடிகையின் கணவர் கைது

நடிகை அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆதித்யன் ஜெயனை கைது செய்தனர், பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

பிரபல மலையாள நடிகை அம்பிலி தேவி. இவர் மம்முட்டியுடன் விஸ்வதுளசி படத்தில் நடித்து பிரபலமானார். மேலும் பல மலையாள படங்களில் நடித்து இருக்கிறார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

சீதா தொடரில் தன்னுடன் நடித்த ஆதித்யன் ஜெயனுடன் அம்பிலி தேவிக்கு இரு வருடங்களுக்கு முன்பு காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆதித்யன் ஏற்கனவே மூன்று முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். அவருக்கு அம்பிலி தேவி 4-வது மனைவி ஆவார். இதுபோல் அம்பிலிக்கும் ஆதித்யன் 2-வது கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இவர்கள் திருமணத்துக்கு விமர்சனங்கள் கிளம்பின. திருமணம் பற்றி கேள்விப்பட்டதும் அம்பிலியின் முதல் கணவர்இனிப்புக்கட்டி (கேக்) வெட்டி கொண்டாடியது பரபரப்பானது. இரண்டு மாதங்களுக்கு முன்பு அம்பிலிக்கும் ஆதித்யனுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் ஆதித்யன் நரம்பை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்றினர்.

ஆதித்யன் ஜெயன், அம்பிலி தேவி

இந்நிலையில் ஆதித்யன் இன்னொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்து தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக அம்பிலி தேவி, காவல்துறையில் புகார் செய்தார். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆதித்யன் ஜெயனை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »