Press "Enter" to skip to content

சந்திரமுகி 2-ம் பாகத்தில் ரஜினி நடிக்கிறாரா? – இயக்குனர் பி.வாசு விளக்கம்

பி.வாசு இயக்கத்தில் உருவாக உள்ள சந்திரமுகி படத்தின் 2-ம் பாகத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் 2005-ல் திரைக்கு வந்து வசூல் சாதனை நிகழ்த்திய படம் சந்திரமுகி. இப்படத்தின் 2-ம் பாகம் பி.வாசு இயக்கத்தில் தயாராக உள்ளது என்றும், ராகவா லாரன்ஸ் கதாநாயகாக நடிப்பார் என்றும் சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் பட வேலைகள் இன்னும் தொடங்கப்படவில்லை. 

இந்நிலையில் ‘சந்திரமுகி 2’ படத்தில் ரஜினிகாந்த் கவுரவ தோற்றத்தில் நடிப்பதாக தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து இயக்குனர் பி.வாசு சமீபத்திய பேட்டியில் கூறுகையில், “சந்திரமுகி 2-ம் பாகத்துக்கான கதை, திரைக்கதை உருவாக்கும் பணிகள் நடக்கிறது. முதல் பாகத்தின் தொடர்ச்சிக்கான இணைப்பு சரியாக அமைய வேண்டும் என்பதால் அவசரப்படாமல் வேலை செய்கிறோம். அடுத்த மாதம் இறுதியில் இந்த பணிகள் முடிவடையும். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளோம்.

பி.வாசு, ராகவா லாரன்ஸ்

சந்திரமுகி படத்தில் நடித்தவர்கள் 2-ம் பாகத்தில் கிடையாது. ரஜினிகாந்த் நடிக்கிறார் என்ற தகவல் உண்மை இல்லை. ‘சந்திரமுகி 2’ படத்தின் கதை வேறு மாதிரி இருக்கும். சந்திரமுகி படத்தில் ஒரு சம்பவம் நடந்தது. சந்தரமுகி 2-ம் பாகத்தில் இன்னொரு சம்பவம் இருக்கும். ராகவா லாரன்ஸ் தற்போது ருத்ரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை விரைவில் முடித்துவிட்டு ‘சந்திரமுகி 2’ படப்பிடிப்பில் இணைவார்” என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »