Press "Enter" to skip to content

‘அரண்மனை 3’ படத்தின் வெளியீடு அப்டேட்

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘அரண்மனை 3’ படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா ஆகியோர் நடித்துள்ளனர்.

அரண்மனை பேய் படம் இதுவரை 2 பாகங்கள் வந்துள்ளன. சுந்தர்.சி இயக்கிய இந்த 2 பாகங்களும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில், தற்போது அரண்மனை படத்தின் 3-ம் பாகம் தயாராகி உள்ளது. ஏற்கனவே 2 பாகங்களை இயக்கி வெற்றிகண்ட சுந்தர் சி தான் இந்த படத்தையும் இயக்கி உள்ளார். 

இதில் கதாநாயகனாக ஆர்யாவும், அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் ஆகிய 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் விவேக், யோகிபாபு ஆகியோர் நகைச்சுவை வேடங்களில் வருகின்றனர். இப்படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. 

ஆர்யா, ராஷி கண்ணா

இந்நிலையில், இப்படத்தின் வெளியீடு அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் மாதம் ‘அரண்மனை 3’ படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இன்று வெளியிடப்பட்ட ‘அரண்மனை 3’ படத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »