Press "Enter" to skip to content

மீண்டும் இணையும் ‘அருவி’ கூட்டணி

‘அருவி’, ‘வாழ்’ போன்ற படங்களை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமன் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அருவி’. அதிதி பாலன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. ‘அருவி’ படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார். 

இதையடுத்து ‘வாழ்’ என்ற திரைப்படத்தை அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கி இருந்தார். கடந்த ஜூலை மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியான இந்தப் படம், கலவையான விமர்சனங்களை பெற்றது.

எஸ்.ஆர்.பிரபு, அருண் பிரபு புருஷோத்தமன்

இந்நிலையில், அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கவுள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ‘அருவி’ படத்தை தயாரித்த எஸ்.ஆர்.பிரபு தான் அருண் பிரபு இயக்க உள்ள புதிய படத்தையும் தயாரிக்க உள்ளாராம். இப்படத்தில் முன்னணி நடிகரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்களாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »