தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, நயன்தாரா இருவரும் கட்டியணைந்து சந்தோசத்தை வெளிப்படுத்தும் காணொளி மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என தமிழ் திரைப்படத்தின் முன்னணி நட்சத்திர கூட்டணி இணைந்து நடித்திருக்கும் படம் “காத்துவாக்குல ரெண்டு காதல்”. ‘நானும் ரௌடி தான்’ படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் மீண்டும் ரொமாண்டிக் நகைச்சுவை ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார்.
அனிருத் இசையில் வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் விளம்பரம் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இப்படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததைஇனிப்புக்கட்டி (கேக்) வெட்டி படக்குழு கொண்டாடிய புகைப்படங்கள் மிகுதியாக பகிரப்பட்டுின.
சமந்தாவை கட்டியணைக்கும் நயன்தாரா
இந்நிலையில் நயன்தாரா காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் தான் நடித்த சீனை பார்த்து வெட்கத்தில் சமந்தாவை கட்டியணைக்கும் காணொளியை சமந்தா வெளியிட்டுள்ளார். இந்த காணொளி சமூக வலைத்தளத்தில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.
[embedded content]
Source: Malai Malar