தெற்கு தொடர்வண்டித் துறைக்கு உட்பட்ட சென்னை கோட்டத்தில் புதிய திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பான ஆரோசனைக் கூட்டம் தெற்கு தொடர்வண்டித் துறை பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் சென்னை சென்ட்ரல் தொடர் வண்டிநிலையம் அருகிலுள்ள தெற்கு தொடர்வண்டித் துறை தலைமையகத்தில் நடைபெற்றது.
கலந்துகொண்டோர்:
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தொடர்வண்டித் துறை உயரதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்
பினர்கள் தயாநிதி மாறன் , கலாநிதி வீராசாமி கதிர் ஆனந்த், கனிமொழி சொமு, ரவிக்குமார், விஷ்ணு
பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திட்டங்கள்:
சென்னை சென்ட்ரல் , தாம்பரம் , ஆவடி ஆகிய தொடர் வண்டிநிலையங்களை நவீனமயமாக்குவதற்கான தொழில் நுட்ப சாத்தியக் கூறு ஆய்வு நடைபெற்று வரும் நிலையில் அது தொடர்பாகவும், சென்னை கோட்டத்தில் 18 தொடர் வண்டிநிலையங்களை நவீனமயமாக்குவது குறித்தும் வரவு செலவுத் திட்டத்தில் தெற்கு தொடர்வண்டித் துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ள 11 ஆயிரத்து 314 கோடி நிதியின் மூலம் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் புதிய தொடர் வண்டிவழித்தடங்களை ஏற்படுத்துவது, அகல தொடர் வண்டிபாதைகளும் இரட்டை தொடர் வண்டிபாதைகளும் அமைப்பது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கைகள்:
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட தொடர் வண்டிசேவைகளை மீண்டும் தொடங்குவது , தொலைதூர ரயில்களை முக்கிய தொடர் வண்டிநிலையங்களில் நிறுத்துவதற்கு அனுமதி பெறுதல் , தொடர் வண்டிகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க மேற்கோள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கலைஞர் பெயர்:
புதிய தொடர் வண்டிவழித்தடங்களை ஏற்படுத்துவது , இரட்டை மற்றும் அகல தொடர் வண்டிபாதைகளை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் எழும்பூர் தொடர் வண்டிநிலையத்திற்கு கலைஞர் பெயர் வைக்க எம்.
பி. தயாநிதி மாறான் தரப்
பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அறிமுக நாயகன் இஷான் நடிப்
பில் ‘அரியவன்’… ட்ரைலர் வெளியீடு!!!
Source: Malai Malar