Press "Enter" to skip to content

70வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வரும் முதலமைச்சர்..!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

மலர்தூவி மரியாதை:

முதலமச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.  நேற்று மாணவர்களுடன்இனிப்புக்கட்டி (கேக்) வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய முதலமைச்சர், இன்று காலை சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  அதனை தொடர்ந்து  மறைந்த கருணாநிதியின் நினைவிடத்தில், முதலமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

பெரியார் திடலில்:


இதையடுத்து வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு வருகை தந்த  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, திராவிட கழக தலைவர் கி.வீரமணி வரவேற்றார். அதன் பின்னர்   அலங்கரித்து வைக்கப்பட்ட பெரியாரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும்  மரியாதை செலுத்தினார்.

உடனிருந்தோர்:

இந்த நிகழ்வின் போது,  பொன்முடி, சேகர்பாபு, உதயநிதி  உள்ளிட்ட அமைச்சர்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சென்னை மேயர் பிரியா உட்பட பலர் உடனிருந்தனர். 

கோபாலபுரத்தில்:

அதன் பின் சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த கலைஞரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து தனது தாயார் தயாளு அம்மாளிடம் பிறந்தநாளை முன்னிட்டு ஆசி பெற்றார் முதலமைச்சர்.

அறிவாலயத்தில்:

அதை தொடர்ந்து அண்ணா அறிவாலயம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மரக்கன்று நட்டு வைத்து,இனிப்புக்கட்டி (கேக்) வெட்டி தொண்டர்களுடன்  பிறந்த நாளை கொண்டாடினார். அதன் தொடர்ச்சியாக   திமுக முன்னணி  நிர்வாகிகள், அமைச்சர்கள் மற்றும் தொண்டர்களிடம் இருந்து வாழ்த்து பெற்று  வருகிறார். 

இதையும் படிக்க:   ரூ.11 கோடியிலிருந்து ரூ.18 கோடியாக உயர்த்தப்பட்ட திட்ட மதிப்பீடு… விறுவிறுப்பாக பணிகள்!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »