Press "Enter" to skip to content

ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில் குடமுழுக்கு…

மயிலாடுதுறை |  சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் காசிக்கு இணையான 6 கோயில்களில் முதன்மையான திருக்கோயிலாக இருக்கிறது. 

சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றான அகோரமுகம் கொண்டு இங்கு சிவன் அகோரமூா்த்தியாக தனி சன்னிதியில் அருள்பாலித்து வருவது சிறப்புக்குரியதாகும். மேலும், நவ கிரக தலங்களில் கல்வி, தொழில் ஆகியவற்றின் அதிபதியான புதன் பகவானுக்குரிய தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. 

மேலும் படிக்க | 3 கிராமங்களுக்கு நடைபெற்ற மீன்பிடி திருவிழா… ஏராளமானோர் பங்கேற்பு… 

இத்தகைய சிறப்புகளைக் கொண்ட இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்திர விழா, கடந்த வாரம் 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான  தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. 

தேரோட்டத்தை முன்னிட்டு விநாயகர், முருகர், பிரம்ம வித்யாம்பிகை உடனான ஸ்வேதாரண்யேஸ்வரர் உள்ளிட்ட சாமிகள் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று மூன்று தேர்களையும் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து  நான்கு வீதிகளையும் வலம் வந்தனர். 

மேலும் படிக்க | எருதுவிடும் விழாவில் காளைகள் முட்டி 15 பேர் காயம்… 

இதில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். வருகின்ற மார்ச்  15ம் தேதி தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

முன்னதாக தேரை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி  சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா எம் முருகன் மற்றும் பன்னீர்செல்வம் சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமல ஜோதி தேவேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். 

மேலும் படிக்க | அழகு முத்துமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா… 

 

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »